Wednesday, June 28, 2006

கருகிடும் மலர்கள்!!!



நேற்றலர்ந்த மொட்டு ஒன்று
சருகாகிப் போனது!
இன்றுதித்த குழந்தை இங்கே
கருகாகிப் போனது!


பெற்றவரின் கனவுகளும்
உற்றவரின் உணர்வுகளும்
சொரணையற்ற சிங்களத்தால்
சிதையாகிப் போனது!


செந்தமிழர் சொந்தங்கள்
பந்தங்கள் பாசங்கள்
வஞ்சகரின் விளையாட்டில்
வெந்துபோய் கிடக்கிறது!!


இன்னும் இன்னும் எதனையோ
செல்லிச் சொல்லி உலகமும்
எம்தமிழர் வாழ்வு தனை
கேள்விக்குறி ஆக்குது - இன்னும்
இந்தக் குழந்தை போல
பல நூறு வேண்டும் என்று
உதவி பல செய்வதனால்
சிங்களத்தைக் கேக்குது!!


எம் அன்னை என்றிருந்த
இந்தியாவும் நோக்குது!
சிங்களவன் பேச்சை நம்பி
கைவிரிக்கப் பார்க்குது!!
தமிழகமும் மத்தியத்தின்
முடிவு தனைக் கேக்குது!!!
தன்னுடைய நலனை எண்ணி
நழுவுகின்ற போக்கிது!!!!

சந்தையில் மந்தைகளா??

சந்தைக்கு விற்க வந்த மந்தைகளா இவை? - இல்லை
சிங்களத்தால் குதறி வீசப்பட்ட ஈழத்து தமிழ் உறவுகள்.

Monday, June 26, 2006

இவர்களும் வாழக்கூடாதா?



இன்றைய சிறுவர்களே உலகின் நாளைய தூண்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதிபர் அப்துல் கலாம் அவர்களே சிறுவர்களின் வளர்ச்சியில் அதிகம் அக்கறை காட்டுகிறார், அது சிறந்த தலைவருக்கு அடையாளம், சிறந்த கல்விமானுக்கு அடையாளம், சிறந்த மனிதாபிமானிக்கு அடையாளம்.

ஆனால் ஈழத்திலே தமிழ்ச் சிறுவர்களில் சிங்கள அரசு காட்டும் கரிசனை இதுதான். நாளை இவர்கள் வளர்ந்து சிறந்த அறிவாளிகளாகி விடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறது சிங்கள அரசு. கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றையே கிழித்து கருவில் இருந்த குழந்தையைக் குத்திக் காலால் போட்டு மிதித்த சிங்கள இராணுவத்தின் தலைமை எவ்வளவு தூர நோக்கான சிந்தனையோடு(தமிழினத்தை அழிப்பதில்) செயல்படுகிறது.

மட்டக்களப்பு மண்ணிலே!


மாடி வீடு கட்டி
மலர்த்தோட்டம் வைத்து
மாந்தரெல்லாம்
மலர்ந்திருக்க

வீட்டில் இருக்க முடியாமல்
விரட்டப்பட்ட இக்குடும்பம்
காட்டிலாவது ஒதுங்கலாம் என்றால்-
காட்டிலும் உனக்கு(தமிழனுக்கு)
காலடிவைக்க ஏதுரிமை என்று
சிங்களம் ஆடிய தாண்டவத்தில்
பிஞ்சிளம் குருத்துக்கள்
அனைத்தையும் பறிகொடுத்து
தனிமரமாய் இந்தத் தாய்!

(படம் கொடுத்துதவிய நண்பருக்கு நன்றிகள்)

Friday, June 23, 2006

தாயின் அணைப்பில்!!





எம் இனத்தில் மட்டும் குழந்தையை தாய் அணைப்பதும், பிள்ளையைத் தந்தை சுமப்பதும் இப்படியாகி விட்டது. விலங்கினத்திற்கோ மற்ற மானிடத்திற்கோ இல்லாத கொடுமை எம்மினத்திற்கிங்கே!

Thursday, June 22, 2006

மீட்டுப்பார்க்க ஒன்று!

Child Rape by Sri Lanka Army

(Atchuvely, Nov 12, 1996)
Selverajah Theenuka is a 10 year old Tamil Hindu girl, living in Pathmeni, Atchuvely on the Jaffna Peninsula. A 5th grade student, she was on her way to school last Tuesday (12th November 96). At 8.15, she was abducted by Sri Lankan soldiers and taken to the Sri Lankan army's Puttur V.C. camp. There, she was stripped and raped repeatedly by Sinhala soldiers. When they had finished, the soldiers released the child.

மனித குலத்தின் மகத்தான ஆராய்ச்சி!



தமிழனாய் பிறந்ததால்

இவளும் ஒருத்தி


குமரபுரத்தில் 11-02-1996இல் இலங்கை இராணுவத்தால் கொடூரமாக கொல்லப்பட்ட 24 அப்பாவித்தமிழர்களில் 3வயதிலிருந்து 12வயதிற்கு இடைப்பட்ட 7 சிறுவர்களும் அடங்குவர். சர்வதேச சிறுவர் உரிமைக் குரல் கொடுப்போரின் கவனங்களுக்கு இவையெல்லாம் எட்டாதோ?

பலியான பிஞ்சுகள்


வஞ்சகத்தின் கரத்தால்
பலியான பிஞ்சுகள் வரிசையில்
இவளும் ஒருத்தி.
என்ன குற்றத்திற்கு இந்தத் தண்டனை?
இதைப் புரிந்தவர்களிற்கு என்ன தண்டனை?

Wednesday, June 21, 2006

'83ல் வலி


புரிகிறதா சிங்களத்தின் பூரிப்பு எதிலே என்று!
இப்பொழுதும் தமிழரனைவரையும் இப்படியாக்கி
பல் இளிக்கலாம் என்று கனவு காண்கிறது சிங்களம்.

Tuesday, June 20, 2006

வங்காலைப் படுகொலை





மன்னார் மாவட்டம் தோமஸ்புரி பகுதியில் 09யூன்2006 அன்று சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய கோரக் கொலை வெறியாட்டத்தில் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்(மேரி மெடலீன்-27), தந்தை(மூர்த்தி மார்ட்டீன்-35) மற்றும் அவர்களது இரு குழந்தைகள்(நிக்சன்-7, லக்சிகா-9)

உலகே பார் எங்கள் வலியை!

ஈழத்தில் அவலங்கள்

ஈழத்தில் அவலங்கள்
எதையும் விட்டுவைக்கவில்லை
மரம், மாடு, வீடு
மாம்பிஞ்சு, குழந்தை குஞ்சு
சடப்பொருட்கள், மடம் கோவில்கள்
நுன்னுயிர்கள், கருவுயிர்கள் என்று
எதையுமே மிச்சம் வைக்காமல்
அனைத்துக்கும் சமமே என்ற பொன்னான வழியை
இன அழிப்பிலும், இழி வன்புணர்விலும் கடைப்பிடித்த
சிங்கள பயங்கரவாதத்தின்
கோர முகத்தின் ஆதாரங்களை,

உலகின் பல்வேறு நாடுகளும்
மானிடத்தின் முன்னேற்றத்திற்காய்
ஏதேதோ புதுமைகளைப் படைப்பதற்காய் ஆய்வு செய்து கொண்டிருக்க
சிங்களம் மட்டும்
சிறுவர்களின் உடலைக் கீறி
குழந்தைகளின் குடலை எடுத்து
செய்யும் ஆய்வுகளை

மனிதனை
பலவிதமான வடிவங்களில் வெட்டி
பலவிதமான விதங்களில் குத்தி எரித்து
கொல்லும் ஆய்வுகளை

பரிசோதனைக் குளாய்க் குழந்தையின்
நாளாந்த வளர்ச்சியை கணிப்பிடும் விஞ்ஞானி போல்
ஒருநாள் புதைத்த தமிழன் எப்படியிருப்பான்
ஒருவாரம் புதைத்த தமிழச்சி எப்படியிருப்பாள்
ஓருமாதம் புதைத்த குழந்தை - ஆண்குழந்தையென்றால் எப்படியிருக்கும்
பெண்குழந்தையென்றால் எப்படியிருக்கும்
ஒருவருடம் புதைத்த கிழவி எப்படியிருப்பாள் என்று
நாள் தோறும் புதைகுழி தோண்டி - சிங்களம் செய்யும்
சர்வதேச மனித நேய ஆராச்சிகளை

நாம் மட்டும் பார்த்து
நாம் மட்டும் கதறி கண்ணீர் விட்டு
நமக்கு நாமே ஆறுதல் கூறிக்கொண்டிருக்காமல்
உலகம் முழுவதும் பார்க்க
அனைத்து சந்ததியும் பார்க்க
ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவாவின்
ஆரம்பமே இது

ஈழத்தின் வலிகளை, அவ் வலிகளின் ஆதாரங்களை, கிடைக்கக் கூடிய வளங்களை வைத்து ஆவணப்படுத்த முயல்கிறேன். தங்களால் ஆன உதவிகளையும் நன்றியுடன் எதிர்பார்க்கிறேன்.