Thursday, July 06, 2006

இப்படியும் ஒரு துயிலெழுப்பல்!!


காலையிலே துயிலெழுப்பி
காப்பித் தண்ணி போட்டுத்தந்து
பார்புகழ வாழ்வாய் என்று - தாய்
வாழ்தி வாழ்ந்த காலம் ஒன்று
ஈழத்திலே இருந்தது
அன்றொரு காலம்!


இன்று
கண்விழித்துப் பார்க்கும்போது
உயிரோடு எத்தனை உறவு
மீதமாக இருக்கிறது என்று
கணக்கு பார்க்க வேண்டி இருப்பதை
எண்ணிப்பார்த்தால்...
கண்ணயரகூட முடியாது!


ஈழத்து உறவுகள்
நின்மதியாக தூங்கி
இன்றோடு
பல பல தசாப்தங்கள்!!!


இனியேனும் ஒருநாள்
இன்னமும் எஞ்சியிருக்கும்
பிஞ்சுக் குழந்தைகள் - அதை
பெற்ற உறவுகள்
நின்மதியாய்க் கண்ணுறங்க
நேரம் கிட்டுமா?

No comments: