
கனத்த மனதுடன் உங்களைக் கேட்கிறேன்
கனிந்த மனதுள்ள உங்களைக் கேட்கிறேன்
படித்த மனிதரே உங்களைக் கேட்கிறேன்
பாரினில் புகழ்பெற்ற உங்களைக் கேட்கிறேன்
இளகிய மனதது உங்களுக்குள்ளது
இயற்கையின் அழிவையே தாங்கிடவற்றது
பச்சை இலையதன் காடுகள் காப்பவர்
பாசத்துடனே விலங்கினை பார்ப்பவர்
விலங்கை விடவும் கேவலமாகிய
விசயங்கள் ஈழத்தில் விஞ்சிக் கிடக்குது
பச்சைக் குழந்தை செத்துக் கிடக்குது
பாகம் பாகமாய் வெட்டிக் குவிக்குது
நித்தம் நித்தமிங்கு சாவுகள் நடக்குது
நினைத்திடாத பல கேவலம் நடக்குது
உங்கள் கண்களில் ஏன்படவில்லை
உங்கள் நெஞ்சினை ஏன்தொடவில்லை
எங்கள் இனமது ஏதிலியான
எதுவும் அடைந்திட அருகதையற்ற
செத்துப் போகவே பிறந்த இனமென்று
செய்வதென்ன இனிஇங்கு உள்ளதென்று
எங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டால் பொதுமென்று
எண்ணி நீங்களும் கைவிட்டு விட்டீரோ